Wednesday, 20 April 2016

பறவையின் பாசம்... கவிதை



அடர்ந்த படர்ந்த காட்டினில்
கரடுமுரடான கற்களை சீர்படுத்தி
வேகமாக புறண்டோடும் கண்ணாடிபோன்ற
தண்ணீர் பாயும் ஆற்றங்கரையோரம்
பறந்து விரிந்த பசுமையான
ஒரு அழகிய நாட்டுக்கருவேலமரம்
அதன் உச்சியினில்
மேற்க்கொட்டிய மூலையில்
மனித கரம்போல் படர்ந்து வரிந்து நிற்கும்
மேற்கிளையில்
காய்ந்த முல்குச்சிகளால் கட்டப்பட்ட
காற்றுக்கு அசைந்தாடும்
மழைக்கு நீரோடும்
வெயிலுக்குக் காய்ந்து கருகும்
வானம் பார்த்த பறவைக்கூடு
அக்கூடில் படுத்திருந்த
மூன்று வெண் முட்டைகள்
இறைதேடி வெகுதொளைவிற்கு சென்ற
தன் தாய்ப் பறவைக்காக காத்திருந்தன
அந்த நொடிகளில்
ஆனென்ற பெண்னென்ற
இரு இளம் வெள்ளைப்பறவைகள்
அக்கூட்டோரக் கொப்புகளில்
பக்குவமாய் வந்தமர
அம்முட்டைகளுக்கு ஆனந்தம்
முட்டையிட்ட பெட்டைக் கொக்கு
அக்கூட்டிலமர்ந்து தன் ஊசி மூக்காள்
மூன்று முட்டைகளையும் அரவனைத்து
தன் இறகுகளுக்குள் மறைத்து
வைத்து அடைகாத்து படுத்துவிட
அருகிலிருந்த ஆண் கொக்கு
தன் நீண்ட மூக்கினைகொண்டு
தன்னவளின்
மூக்கோரம் கண்னோரம்
காதோரம் கழுத்தோறமென்று
வருடிக்கொடுத்த பாசமான நொடிகள்
ஆறிவு படைத்த
மனித இனத்தின் காதலையும்
வென்று நின்றது
ஐந்தறிவு படைத்த பறவைகளின் காதல்…

No comments:

Post a Comment