டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
-கவிதை
எல்லாம்
கடந்து, வீட்டை மறந்து,
வெளி
நாட்டில் பயின்று, மேதையானவர்.
மனித
பாகுபாடுகளை களைந்து எரியுங்கள்
சமத்துவத்தை
நிலை நாட்டுங்கள் - என
தன்னாட்டு
மக்களுக்கு மட்டுமின்றி
உலக
நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர்.
கற்பி!
ஒன்று சேர்! போராடு!
அஞ்சாதே!
நிமிர்ந்து நில்! என்ற
பகுத்தறிவு
தந்திரங்களை
மக்கள்
நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர்.
மேலை
நாடுகளில்
பல
சட்டங்களை கற்று முடித்து
மத்திய
அரசின் பரிந்துரையால்
தன்
நாட்டிற்கான புதிய சட்டங்களை இயற்றி
அதைத்
திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர்.
நம்
இந்திய அரசியல் சாசனத்தின்
தலையாய
தந்தையானவர்.
சட்டம்
பயில்வோர்கள்,
சமத்துவம்
போற்றுவோர்கள்- என
ஏனைய
மக்களின் குருவானவர்.
இந்த
இருபதாம் நூற்றாண்டு
இன்று
போற்றி மகிழும்
நம்
இந்தியாவின்
இரண்டாம்
தந்தையானவர்.
இவர்
சாதி, மத, பேதம் போற்றும்
அரசியல்
கட்சிகளின் தலைவரில்லை
சமத்துவத்தின்
சமூக
நல்லிணக்கத்திற்கான அறிஞர்.
அவர்
இங்கு பிறந்த எல்லா மக்களும் சமமென்றார்
ஆகவே
- ஏழை மக்களின்
விடுதலைக்காக
அரும்பாடுபட்டார்.
யார்?
அவர், அவர் தான்.
சட்ட
மேதை, அறிவுச் சுடரொளி,
ஆற்றலின்
அடைமொழி, அகிம்சையின் தத்துவம்,
உண்மையின்
உருவம், அடக்கத்தின் அடையாளம்,
எழுச்சியின்
அறிமுகம், புரட்சியின் பூர்வீகம்,
இந்தியாவின்
கலங்கரை விளக்கம்,
மாமேதை,
புரட்சியாளர்,
No comments:
Post a Comment