Monday, 18 April 2016

அக்டோபர்- 15- 2015



உண்மையும், உழைப்பும்,
நேர்மையும், தூய்மையும்,
எளிமையும், வலிமையும்,
திறமையும், ஆற்றலும்,
அறிவும், அறமும்
எனச்செறிந்த
கற்றறிந்த மாமேதை
மேதகு. நம் முன்னாள் குடியரசுத் தலைவர்,
.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின்
பிறந்த நாள் இன்று

இப்படியொரு மகத்தான  தலைவரை
மீண்டும் எப்போது
காண்போமென்று
மக்களை ஏங்க வைத்த
மாமனிதரின் பிறந்த நாளான
அக்டோபர்- 15 என்ற
இந்த இனிய நாளில்

நம் இந்தியாவை 2020-ல்
வல்லரசு நாடாக்க சபதம் ஏற்று
டாக்டர் .பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின்
கனவை மெய்படச் செய்ய 
அவர் வழியில்
நம் அனைவரின்
கனவுகள் மெய்பட்டெழ

அனைவரும் பாடுபடுவோம்
என்ற உறுதி மொழியோடு
.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின்  பிறந்த நாளை
உங்களோடு பகிர்ந்து கொள்வதில்

நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்

No comments:

Post a Comment